சனி, 8 ஆகஸ்ட், 2009

தந்தையாக்கிய மகன்

பிடிகொண்டு கற்க மறுத்தாய்
- மகனாய் இருந்து விட்டாய் !
பிடிதளர் நாடாமல் அந்நல்வழி பற்ற தீட்டிக்கொள்
- பெற்றவன் ஆகி விட்டாய் !

இன்றும் நாளையும்

இன்பங்கள், இறைவன் பாதம் பணியட்டும் !
துன்பங்கள், நிலையா தென்றலுடன் இணையட்டும் !
மனம், உனது 'இன்றை' உயிர் நண்பன் காதில் ஓதட்டும் !
கடனற்ற உனது 'நாளை' புதியதாய் துவங்கட்டும் !!!