வியாழன், 2 ஏப்ரல், 2009

நண்பா

(நட்புலகிற்கு பதில் சொல்வாயா..)

வெண்மலர் காதல் நெஞ்சில் கொண்டாய்
உன் பாதி நீ சேரா சூல்வலி கொண்டாய்
வலி நீங்குவதாய் உயிர் நீங்கினாயே
இக்கணம் சொல் வலியை நீங்கினாயா?

என்றும் மற்றோர் நலன் நினைவிற் கொண்டாய்
உனக்கென நினைவிற் கொள்ள மறந்து விட்டாய்
இவ்வலி உடலையன்று உயிரை சார்ந்ததென்று !
உடலை பிரிந்தாலும் உயிர் வாழுமென்று !