திங்கள், 23 மார்ச், 2009

வேலையுதிர்காலம்


முழு நிலவும் காணாமற் கரைந்து போக
பதினைந்து நாள் அவகாசம் தேவை
இவன் கொடுக்கப்படவில்லை!

பூஞ்சோலை பாலைவனமாக உருமாற
பல நூறு ஆண்டுகள் அவகாசம் தேவை
இவன் அளிக்கப்படவில்லை!

கிளைகள் தன் சொந்தங்களை இழக்க
ஒரு இலையுதிர் காலம் அவகாசம் தேவை
இவன் வழங்கப்படவில்லை!

மிதந்து வரும் சுனாமி நிலத்தினை தொட்டழிக்க
சில மணி நேரங்கள் அவகாசம் தேவை
இவன் அறிவிக்கப்படவில்லை!

பிறந்த மேனி சாம்பலாய் காற்றில் மறைய
ஒரு ஆயுள் காலம் அவகாசம் தேவை
இவன் பெறப்படவில்லை!

இவன்--
நேற்றைய எதிர்காலம் இன்றைய கேள்விக்குறியாய்
கலங்கி நிற்கும் கணிப்பொறி வள்ளுவன்!!