வெள்ளி, 24 அக்டோபர், 2008

நிலா உலா

அழகா இருக்கியே நிலா !
வானத்துல வர்றே உலா !
மின்னிட்டு இருக்கேன் உனக்கு பக்கத்துலதான் நட்சத்திரமா !
எந்த மேகத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கேன்னு கண்டுபுடி தைரியமா !

திங்கள், 6 அக்டோபர், 2008

இனிய இரவு


இதோ நிலவு வெள்ளொளி வீசி
இரவை குளிரச் செய்து கொண்டிருக்கிறது !
இருதயம் தாண்டி ஆன்மாவில்
அமைதி நிலவ ஆரம்பித்து விட்டது !
இந்நாள் நன்னாளாய் அமைந்ததற்கு
இறைவனுக்கு நன்றி செலுத்தி
கண்களை மூடி
ஆழ்ந்த உறக்கம் கொள்க !
இனிய இரவு !!!

அலைகள்

அலைகள் !
ஒன்றன் பின் ஒன்றாய்,
சிறுதும் பெரிதுமாய்,
உறவென்று சொல்லிக்கொண்டு
உரையாடிவிட்டு போகும் !
உரையாடும் பொழுது களிப்பதும்
விலகும்பொழுது தவிப்பதும் இயல்பே!

நான் நில்லாமல், நில்லாது சுழல்வது இப்புவியன்றோ!
என் மனம் இந்நிலை அடையும் நாள் என்றோ!?!