திங்கள், 8 செப்டம்பர், 2008

தூது

ஆதவனின் தூது வெந்கதிறாய் பனித்துளிக்கு !
ஆழ்கடலின் தூது பனிமலையாய் காற்றுக்கு !

விடியலின் தூது செந்நிறமாய் இரவுக்கு !
விரிந்த வானின் தூது மழைத்துளியாய் விளைநிலத்துக்கு !

பழந்தமிழின் தூது இலக்கியமாய் உயர்புலவர்க்கு !
பால்நிலவின் தூது வெள்ளொளியாய் இருளுக்கு !

இயற்கையின் தூது இயற்கையாய் இயற்கைக்கு !
இங்கு எவரின் தூது எதுவாய் எவருக்கு!?!

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

அமைதி


அகன்ற விழிகளில் கூரையாய் என் வானம் !
இரு விழிகளும் அறியாது
இரு இமைகள் இனைந்த நேரம் !

அன்றே மலர்ந்த மழலையாய் நான் !
தவழ்ந்தேன் என் அன்னை மடியில்
செவித்து நெகிழ்ந்தேன் அவள் தமிழ் பாட்டில்!

கடந்த காலம் கடந்தனவாய் !
வரும் காலம் வருவனவாய் !
தந்தேன் என் நிகழ்காலம் அவள் கையில்
பெற்றேன் அமைதியை என் நெஞ்சில் !

வியாழன், 4 செப்டம்பர், 2008

நிலா

அள்ளமுடியா முத்து !
தேவலோகத்தின் சொத்து !

எட்டா கனி !
தூவினாய் பனி !

ஆதிசேஷனின் வெண்மரகதம் !
வெப்பத்திற்கு சுதந்திரம் !

வான்மகளின் நெற்றிப்பொட்டு !
சிந்தா இனிய தேன் கூடு !

மின்மினிகளின் மின்சாரம் !
சிதறா பாதரசம் !

மேகங்களை சலவை செய்யும் படிகாரம் !
மொட்டுக்களின் இரவு நேர கடிகாரம் !

நீ இன்றி உருவாக்கினாய் அமாவாசை !
வெற்றியும் தோல்வியும் வாழ்வின் இசை !!!

அறிமுகம்

தமிழ் பழமை வாய்ந்த செம்மொழி !
அதில் என் மதி அறிந்த, அழகிய நான்கு சொற்கள்
எடுத்து கோர்த்து பொருள்பட எழுதினேன்
கவி என்று பெயரிட்டது நட்புலகம் !
கவி உருவாகும் விதிமுறைகளுக்கு உட்படவில்லையேல்
சாடபடுபவள் நானில்லை!
எழுத்துக்களை சேமித்து வைக்க இவ்விடம் அறிமுகமாகியதால்
அறிமுகமாகிறேன் கவியுலகிற்கு!

வணக்கம்!