சனி, 8 ஆகஸ்ட், 2009

தந்தையாக்கிய மகன்

பிடிகொண்டு கற்க மறுத்தாய்
- மகனாய் இருந்து விட்டாய் !
பிடிதளர் நாடாமல் அந்நல்வழி பற்ற தீட்டிக்கொள்
- பெற்றவன் ஆகி விட்டாய் !

இன்றும் நாளையும்

இன்பங்கள், இறைவன் பாதம் பணியட்டும் !
துன்பங்கள், நிலையா தென்றலுடன் இணையட்டும் !
மனம், உனது 'இன்றை' உயிர் நண்பன் காதில் ஓதட்டும் !
கடனற்ற உனது 'நாளை' புதியதாய் துவங்கட்டும் !!!

வியாழன், 2 ஏப்ரல், 2009

நண்பா

(நட்புலகிற்கு பதில் சொல்வாயா..)

வெண்மலர் காதல் நெஞ்சில் கொண்டாய்
உன் பாதி நீ சேரா சூல்வலி கொண்டாய்
வலி நீங்குவதாய் உயிர் நீங்கினாயே
இக்கணம் சொல் வலியை நீங்கினாயா?

என்றும் மற்றோர் நலன் நினைவிற் கொண்டாய்
உனக்கென நினைவிற் கொள்ள மறந்து விட்டாய்
இவ்வலி உடலையன்று உயிரை சார்ந்ததென்று !
உடலை பிரிந்தாலும் உயிர் வாழுமென்று !

திங்கள், 23 மார்ச், 2009

வேலையுதிர்காலம்


முழு நிலவும் காணாமற் கரைந்து போக
பதினைந்து நாள் அவகாசம் தேவை
இவன் கொடுக்கப்படவில்லை!

பூஞ்சோலை பாலைவனமாக உருமாற
பல நூறு ஆண்டுகள் அவகாசம் தேவை
இவன் அளிக்கப்படவில்லை!

கிளைகள் தன் சொந்தங்களை இழக்க
ஒரு இலையுதிர் காலம் அவகாசம் தேவை
இவன் வழங்கப்படவில்லை!

மிதந்து வரும் சுனாமி நிலத்தினை தொட்டழிக்க
சில மணி நேரங்கள் அவகாசம் தேவை
இவன் அறிவிக்கப்படவில்லை!

பிறந்த மேனி சாம்பலாய் காற்றில் மறைய
ஒரு ஆயுள் காலம் அவகாசம் தேவை
இவன் பெறப்படவில்லை!

இவன்--
நேற்றைய எதிர்காலம் இன்றைய கேள்விக்குறியாய்
கலங்கி நிற்கும் கணிப்பொறி வள்ளுவன்!!

செவ்வாய், 16 டிசம்பர், 2008

தேடல்

(வாழ்கை துணையை தீவிரமாய் தேடுபவர்களுக்கு...)

உன் உயிரின் தேடலில் நீ
செவிடனாகிவிட்டாய் குருடனாகிவிட்டாய் !
நிலவின் ஆதிக்கத்தில் உன்னை
தழுவும் தென்றலுக்கு
இசையமைப்பவள் அவளென்று அறியாயோ !
ஞயாயிறின் ஆதிக்கத்தில்
உன் காட்சிப்பொருளின் அழகென
நிறைந்திருப்பவள் அவளென்று அறியாயோ !
பதியார் இங்கிருக்க
உமையவள் எங்கிருக்க கூடும் !?!

வெள்ளி, 21 நவம்பர், 2008

STC12-A

கண்களின் நேர் பார்வையில்
வானம் பூமியின் சமரசம் !
அங்கு மிதக்க பிறக்கும் மேகங்கள்
கை கோர்த்து நடை பழகும் !
காற்றென்னும் உளி அவைகளை
விரும்பியபோதெல்லாம் வடிவமைக்கும் !
அதில் உதிரும் மழைத்துளிகள் போட்டிக்கொண்டு
எம்மைத்தொட ஓடி வரும் !

பொன்னிற மாலை பொழுது
சமரசத்தில் இணையும் சூரியன் !
சேகரித்த அன்றைய தகவல்களை
ஆங்காங்கு பகிரும் பறவை கூட்டம் !
அலுவல்களை முடித்துக் கொண்டு
தலைவனை தொடர்ந்து கூடு திரும்பும் !
அனுபவங்களை தாலாட்டென இசைத்து
தன் குழந்தைகளை உறங்கச்செயும் !

சூரியன் முடித்த பணியை
மின்விளக்கு தொடர துவங்கும் !
விளக்குகள் ஏந்திய வாகனங்கள்
நெடுஞ்சாலையில் அணிவகுத்து நிற்கும் !
வாகன வெள்ளம் கடந்தால், வரவேற்க
தெருவோரம் நின்று தெருவிளக்கும் கண்ணடிக்கும் !
இவ்விளக்குகள் செயல்புரிய மறுத்துவிட்டால்
வெளிச்சத்திற்கு வெண்ணிலா தலைமை தாங்கும் !

நகரின் எத்திசையில் மழை !
எத்திசையில் வெயில் !
நகரின் எப்பகுதியில் பசுமை !
எப்பகுதியில் வெறுமை !
இவைகளையெல்லாம் கண்டு ரசிக்க செய்தது
பன்னிரெண்டாம் தளம் !
ரசிப்பதற்கு ஏற்ப அலுவலிடம் கொடுத்தது
எமக்கு அளித்த வரம்!!!

வெள்ளி, 24 அக்டோபர், 2008

நிலா உலா

அழகா இருக்கியே நிலா !
வானத்துல வர்றே உலா !
மின்னிட்டு இருக்கேன் உனக்கு பக்கத்துலதான் நட்சத்திரமா !
எந்த மேகத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருக்கேன்னு கண்டுபுடி தைரியமா !